செங்கல்பட்டில் நாய்களுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
செங்கல்பட்டு நகரில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாய்களால் இருசக்கர சக்கரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். ஒருசில நாய்கள் வெறிபிடித்து பொதுமக்களையும் கால்நடைகளையும் கடித்து விடுகிறது.
அதனால் செங்கல்பட்டு நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ப்ளூகிராஸ் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் வெறிநாய்களை பிடிக்க முடிவு செய்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், நத்தம், ஜே.சி.கே நகர், வேதாச்சலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய திட்டமிட்டு,..
அதன் முதல்கட்டமாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 4 வது வார்டு பாசித்தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை நகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்து
வருகின்றனர்.