BREAKING NEWS

சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.

சேலம் அருகே மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம்

ஆத்தூர் பழைய பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு கோவில் உட்பட ஐந்து கூரை வீடுகள் எரிந்து சேதம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர் புகை மூட்டமாக காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பழைய பேட்டையில் ராணி என்பவருக்கு சொந்தமான நான்கு கூரை வீடுகள் உள்ளன அதில் சேட்டு, அன்பு| அய்யம்மாள் ஆகிய மூன்று பேரும் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று அவர்கள் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதால் மல மலவென கொழுந்து விட்டு எறிய தொடங்கியதால் தொடர்ந்து நான்கு வீடுகளும் தீ பரவி எறிந்தது   

மேலும் அந்த வீட்டில் அருகில் இருந்த ஆஞ்சநேயர் கோவில் மேற்கூரையிலும் தீப்பரவி எறிந்தது,

 

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நிலையை அலுவலர் அசோகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

 இருந்த போதிலும் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உடைகள் அனைத்தும் முற்றிலும் அறிந்து சேதம் அடைந்தது,

 

மேலும் தொடர்ந்து நான்கு வீடுகளும் ஒரு கோவிலும் தீப்பிடித்து எறிந்ததால் அப்பகுதியில் அதிகளவில் புகை மூட்டமாக காணப்பட்டது.

 

இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

 

CATEGORIES
TAGS