BREAKING NEWS

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரியக்கோவில் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரியக்கோவில் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

 

அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுமென்பதால் , கரியக்கோயில் வசிஷ்ட நதி கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

 

இந்த அணை மூலம் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி , கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

 

இதனிடையே கல்வராயன் மலை பகுதியில் பெய்த வந்த தொடர் மழையால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கரியக்கோயில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது, அணையில் 175 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது.

 

 

இதனிடையே அணைக்கு நீர்வரத்து 31 கன அடியாக உள்ளது, இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 51 அடியை தொட்டதும் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்படும் இந்த உபரிநீர் வசிஷ்டநதியில் கலப்பதால், 

 

கரியக்கோயில், வசிஷ்டநதி கரையோர கிராம மக்களுக்கு, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )