தஞ்சாவூரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூரில் புகழ்பெற்ற தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, நெட்டி வேலைப்பாடுகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்குகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள்,
திருபுவனம் பட்டு, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது இப்பொருட்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையமான துர்கா கைவினைப் பொருட்கள் மையத்தினை மாநகராட்சி மேயர் ராமநாதன் துணை மேயர் அஞ்சுகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் விற்பனை நிலைய உரிமையாளர் ராதா எழிலரசி கோகுல் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் கனகவல்லி பாலாஜி வார்டு செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.