BREAKING NEWS

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.

 

மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர்.

 

 

இவர்களுக்கு ஆண்டுதோறும் திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது, இதனையடுத்து தஞ்சாவூரில் எம்பி
பழநிமாணிக்கம் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன் மேயர் ராமநாதன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS