BREAKING NEWS

தஞ்சையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி.

தஞ்சையில் அமைச்சர்  மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி  மாரத்தான் போட்டி.

தஞ்சை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேயர் சன் ராமநாதன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. 5 கிலோ மீட்டர் தூரம், 10 கிலோ மீட்டர் தூரம். 20 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.


போதைப்பொருள் ஒழிப்பு சட்டவிரோத கடத்தலை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியினை தொடங்கி வைத்தனர். ஐந்து கிலோமீட்டர், பத்து கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும் 20 கிலோமீட்டர் பிரிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் ராமநாதன் கலந்து கொண்டு ஓடினார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )