தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மார்பக புற்றுநோய் அறிகுறியை பெண்கள் தாங்களே பரிசோதித்து கண்டறிந்தால் குணப்படுத்துவதோடு உயிரிழப்பை குறைக்க முடியும் என தஞ்சையில் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெண்களை கேட்டுக்கொண்டார்.
தஞ்சையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரி மாணவிகள், மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுப்போம்,
பெண்களின் நலம் வீட்டின் நலம், ஆரம்பத்திலேயே நோய் கண்டறிந்து குணப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக ராமநாதன் ரவுண்டானா, ரயிலடி வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தற்பொழுது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை அவர்களை பரிசோதித்து கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் உயிரிழப்பை தடுக்க முடியும் என தெரிவித்தார்.