தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்
தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார்.

தஞ்சையில் கல்லூரிக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
தஞ்சை மேலவீதி வளையல்கார தெருவை சேர்ந்த 22 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES தஞ்சாவூர்
