தஞ்சையில் 4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தல் பணி.

தஞ்சையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் 5 அடி அகலம் கொண்ட வடிகால் வாய்க்கால்களை நீண்ட காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், கட்டிடங்களை நீதி மன்ற உத்தரவுப்படி இடித்துவிட்டு,
12 கோடி ரூபாய் செலவில் புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டும் பணிகளை இன்று ஆய்வு செய்த தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், தேரோடும் நான்கு வீதிகளிலும் பழைய மின்சார வயர்களை மாற்றிவிட்டு பைபர் கேபிள்கள் பூமிக்கடியில் புதைக்கும் பணிகள் 16 கோடி ரூபாய் செலவில் விரைவில் துவங்க உள்ளது என்றார்.
பேட்டி: திரு. சண். ராமநாதன் – மேயர் தஞ்சை மாநகராட்சி
தஞ்சை நகரின் மையப்பகுதியான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி ஆகிய 4 வீதிகளிலும் ஆயிரக்கணக்கான கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ள நிலையில்,
4 வீதிகளிலும் மழை பெய்தால் நீர் வடிய இரு புறமும் வடிகால் வாய்க்கால் இருந்த நிலையில்,
வணிகர்கள் வாய்க்கால்களை முழுமையாக ஆக்கிரமித்து கட்டிடங்கள், வாசல் படிகள் உள்ளிட்ட கட்டிடங்களை கான்கிரீட்டால் கட்டியதால் மழைநீர் வடிய வழியில்லாமல் சாலைகளிலேயே தண்ணீர் தேங்கி கிடந்ததால்,
நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையும், மாநகராட்சியும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில்,
12 கோடி ரூபாய் செலவில் மீண்டும் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகளை பொறியாளர்களுடன் ஆய்வு செய்த தஞ்சை மேயர் ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மழைக் காலம் வருவதற்குள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளது என்றும்,
தேரோடும் 4 வீதிகளிலும் மின்கம்பங்களை அகற்றிவிட்டு, பைபர் மின்வயர்களை பூமிக்குள் புதைக்கும் பணிகள் 16 கோடி ரூபாய் நிதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரைவில் துவங்க உள்ளது என்றார்.