BREAKING NEWS

தஞ்சை அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சை அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார் அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

தஞ்சை வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் சுவாமிநாதன் வயது 36 இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக இவர் சிறைக்கும் சென்றுள்ளார்.

 

வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன் தீபாவளி பண்டிகைக்காக தஞ்சைக்கு வந்தார் இதனை அறிந்த வர்ம கும்பல் அவரை நோட்டமிட்டுள்ளனர்.

 

 

நேற்று இரவு 11:30 மணியளவில் வடக்கு வாசல் பகுதியில் இருந்து அவர் பிருந்தாவனம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அறிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளப் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

போலீஸ் தரப்பில் கூறும் போது கொலை செய்யப்பட்ட சாமிநாதன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன பழிக்கு பலியாக சாமிநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது.

 

 

 

எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதுடன் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )