BREAKING NEWS

தஞ்சை கள்ளபெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுபோதையில் புகுந்த நபர் உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை கள்ளபெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதுபோதையில் புகுந்த நபர் உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கள்ளப் பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் புகுந்த நபர் தலைமை ஆசிரியரை ஆபாச வார்த்தையில் பேசியதோடு தடுக்க முயன்ற உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதை எடுத்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளியில் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் மேல்நிலை வகுப்பிற்கு உரிய உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று பணியிடத்தை நிரப்ப வேண்டும் மேல்நிலை வகுப்புகளை இடைநிலை ஆசிரிய ஊதிய பெரும் உடற்கல்வி ஆசிரியர்கள் கையாளுவதை கைவிட வேண்டும் ஆசை கோரிக்கைகளையும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )