தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:

ஒரத்தநாடில் பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஆலயம்
காலத்தால் சிதிலமடைந்த ஆலயம் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கோடி ரூபாய் நிதியில் அனைத்து கோபுரங்களும் புனரமைக்கப்பட்டு, கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு யாகசாலை பூஜைகளுடன் இன்று கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்
