BREAKING NEWS

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம். கல்யாணசுந்தரம் எம்.பி. தீர்மானங்களை விளக்கி சிறப்புரை.

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்.  கல்யாணசுந்தரம் எம்.பி. தீர்மானங்களை விளக்கி சிறப்புரை.

 

தஞ்சாவூர் மாவட்டம். 

தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் க.நஷீர்முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செ.இராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் தீர்மானங்களை விளக்கி மாவட்ட கழக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி பேசினார்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் முழுவதும் நலதிட்ட உதவிகளை வழங்குவது,

தஞ்சை வடக்கு மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு நினைவு அறிவாலய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவாக நடைபெற்று தலைவர் கலைஞர் 100வது பிறந்தநாளில் கட்டி முடிப்பது,

 

 

மாவட்ட மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலும், நஞ்சை, புஞ்சை நிலங்களின் விஸ்தீரணம் அடிப்படையிலும் பாபநாசம் தாலுக்காவை இரண்டாக பிரித்து சாலியமங்கலத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டியும், அதைபோல் திருவிடைமருதூர் தாலுக்காவை இரண்டாக பிரித்து பந்தநல்லூரை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் எனவும்,

 

தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலும் ஊராட்சிகளின் வளர்ச்சியின் அடிப்படையில் அருகில் உள்ள பேரூராட்சிகளை சுவாமிமலையின் அருகில் உள்ள நாகக்குடி, திருவலஞ்சுழி ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்வு செய்ய வேண்டும் எனவும், அதைபோல் பாபநாசம்,

 

அய்யம்பேட்டை ஆகிய பேரூராட்சிகளின் அருகில் உள்ள கிராமங்களை ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்வு செய்ய வேண்டும் எனவும் மற்றும் பெரிய ஊராட்சிகளான பட்டீஸ்வரம், கபிஸ்தலம், நாச்சியார்கோயில், பந்தநல்லூர் ஊராட்சிகளை அருகில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது,

 

கழக நிர்வாகிகள் இரட்டை பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அவர்கள் விரும்பும் பொறுப்பில் இருந்து கொண்டு மற்ற பொறுப்பிலிருந்து தாங்களாகவே விடுவித்து கொண்ட கடிதத்தை மாநகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பெற்று மாவட்ட கழகத்திடம் ஒப்படைக்க வேண்டுமாய் இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்வது,

 

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிற கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிக அளவில் கூட்டுறவு சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி அரசியல் சார்பற்றவர்களை, திருக்கோயில் அறங்காவலர்களாக தேர்வு செய்து கொடுப்பது,

 

டெல்டா மாவட்டத்தில் பருவம் தவறிய மழை பொழிவால் பலத்த சேதம் அடைந்த சம்பா பயிர்களுக்கு 1 ஹெக்டேர்க்கு இருபதாயிரம், உளுந்து பயிர் வகைகளுக்கு மூன்றாயிரம் வழங்க உத்தரவிட்ட விவசாயிகளின் பாதுகாவலர் தமிழக முதல்வர்க்கு டெல்டா மாவட்ட விவசாயிகளின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வது,

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது உழைப்பது
உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் கோ.விஅய்யாராசு, எஸ்.துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், ஜெ.நடராஜன், கும்பகோணம் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குட்டி இரா. தெட்சிணாமூர்த்தி, மாநிலக் கழக நிர்வாகிகள் ஆடுதுறை மு.உத்திராபதி, இராம.விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

CATEGORIES
TAGS