BREAKING NEWS

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 

 

தகவலினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிலை மணி தலைமையில் ரோந்து பணி மேற்கொண்ட போலீசார்
அனுமந்தன்பட்டி சர்ச் தெரு பகுதியில் சந்தேகப்படும் படியாக நடந்து சென்ற வரை விசாரணை செய்ததில்,

 

அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவரை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த துணி பையில் ரூபாய் இரண்டு லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தமிழக அரசு தடை செய்த 6 ஆயிரம் கேரளா லாட்டரி சீட்டுக்கட்டுகளை வைத்திருந்தது தெரிய வந்து.

 

 

மேலும் அவரை விசாரணை மேற்கொண்டதில் வி.சி.க கட்சியில் தேனி மாவட்ட துணைச் செயலாளர் என்பதும் உத்தமபாளையம் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலருமான ஆரோக்கியசாமி என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த உத்தமபாளையம் காவல்துறையினர் ஆர்கே சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

போதை ஒழிப்பு, சூதாட்டம் தடை செய்தல் போன்றவைகளை கொள்கையாக கொண்டுள்ள விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் இவ்வாறு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS