தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது நடிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதை விட தலைவர்களுக்கு கொண்டாடுங்கள் அல்லது இந்த நாட்டிற்கு சேவை செய்தவர்களுக்கு கொண்டாடுங்கள். கொரோனா தடுப்பூசி குறித்து பேசியனார்.
நாங்க எல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவிகளாக இருக்கும்போது எங்கேயாவது இருந்து தடுப்பூசி கிடைக்குமா என்று ஏங்கி கொண்டிருந்தோம். இன்று பெருமையாக சொல்வேன் 200 கோடிக்கு மேல் டோஸ் கொடுத்து அதற்கு மேல் நமக்குப் போக 150 நாடுகளுக்கு மேல் தடுப்பு ஊசி ஏற்றுமதி செய்து இருக்கிறோம். அதன் மூலம் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
CATEGORIES திருநெல்வேலி