தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு நடைபெற்றது.

தமிழகத்தில் பெறுகிவரும் பயங்கரவாத செயல்களை கண்டித்து இந்து எழுச்சி பேரவை நடத்தும் எழுச்சி தோழர் பழ. சந்தோஷ் குமாரின் பயங்கரவாதத்திற்கு எதிரான உயிர் காக்கும் உரிமை முழக்க நிகழ்வு இன்று மாலை இந்து எழுச்சி பேரவையின் மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது,
தலைமை : சாய் ரகு மாநகர் மாவட்ட தலைவர் ஜி.டி.சதிஷ் கண்ணா மாநில பொது செயலாளர்
முன்னிலை : கணேஷ்
மாவட்ட பொது செயலாளர் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்.

உரிமை முழக்கம்:
எழுச்சி தோழர் பழ. சந்தோஷ் குமார்
மாநில தலைவர்
கோவை கார் வெடிப்பு பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும், 15வருடத்துக்கு மேல் சிறையில் உள்ள குண்டு வெடிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்,
மாநில அரசு உடனடியாக பயங்கரவாதிகளை கைது செய்து மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கம் எழுப்ப பட்டது.
