தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள சடைமாங்குளம் ,வெங்கட்ரங்கபுரம் போன்ற ஊர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக 10 ஐ, 7 சி ஆகிய அரசு பேருந்துகள் செல்லாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேற்படி வெங்கட்ரங்கபுரம், இடையன்குளம், வடுவூர் பட்டிஆகிய ஊர்களுக்கு 10 ஐ, 7 சி போன்ற அரசு பேருந்துகளை இயக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர்தேயிலை மைதீன் அவர்களின் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் அ.காஜா, சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் ஷேக் மைதீன், பொருளாளர் பாதுஷா,சடை மான் குளம்கிளைச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங், பொருளாளர் கிங்ஸ்லி மற்றும் இளைஞர்கள் ஆகியோர் போக்குவரத்து மேலாளர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.. மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
