BREAKING NEWS

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு  அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.

 

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சமுதாய கூடத்தில் வைத்து நடைப்பெற்ற போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் தசரத ராமன், பேச்சியப்பன், கிராம களஞ்சியம், செல்லையா, செல்ல கண்ணன், முத்து, திருமலைசாமி, வனராஜ், ஜெபமணி, தமிழ் வேந்தன், ஜெயாலுதீன், சுப்பிரமணியன், பாக்கியராஜ், அற்புதராஜ், முத்துமாலை, ரங்கசாமி, ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள்.

 

 

இக்கூட்டத்தில் தமிழக அரசு ஆட்சிக்கு வந்த நூறு நாளில் 2015 நவம்பர் முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை உடனடியாக நிறைவேற்றிடவும், ஊழியர்கள் ஓய்வு பெரும் நாளிலேயை ஓய்வுகால பணப்பலங்களை வழங்க வழியுறுத்தல், இறந்த பணியாளர்களின் வாரிசு காரர்களுக்கு பணி நியமனம் உத்திரவு களை வழங்கிடவும், பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தினர்.

 

மேலும் வரும் மார்ச் 15 தேதிக்குள் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேறாறாவிட்டால் தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS