தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள், சங்கம் பயிலரங்கம் கூட்டம்.

சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முனைவர் தங்க முனியாண்டி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மாவட்டப் பொருளாளர் கவிஞர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முனைவர் அன்பரசன் தொடக்க உரையாற்றினார்.
எழுத்தாளர் ஜீவசந்தன் சிவகங்கை மாவட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் உரையாற்றினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே வேலாயுதம் “அமைப்பும், அமைப்பாவதன் அவசியமும்” என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கவிஞர் சாதிக், கவிஞர் ஜீவா, ஆகியோர் கவிதை வாசித்தனர்.
கிராமியப் பாடகர்கள் தமிழ்க்கனல், வைகை பிரபா, வைகறை கோமதி, சின்னக் கண்ணன், அலைகள் நாராயணன், சந்திரன் ஆகியோர் கிராமியப் பாடல்கள் பாடினர். நாள் முழுவதும் நடைபெற்ற இப்பயிலரங்கில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாவட்டக் குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
செய்தியாளர் வி.ராஜா.