BREAKING NEWS

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.

தரங்கம்பாடியில் பள்ளி மாணவ மாணவி மற்றும் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளம் தொழிலதிபர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையார் அடுத்து எருக்கட்டாஞ்சேரி பகுதியில் இளம் தொழிலதிபர் ஏ.கே.சந்துரு, தனது பிறந்த நாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடினார்.

 

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டு உபகரணங்கள், தமிழக அளவில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

 

 

அதேபோல் முதியோர், ஏழை மக்களுக்கு உதவித்தொகை, ஆடைகள், மளிகை பொருள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS