BREAKING NEWS

தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் நடும் விழா.!

தரங்கம்பாடி பகுதியில் பனை விதைகள் நடும் விழா.!

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஸ் கோட்டை அருகில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் 91 வது பிறந்தநாளை முன்னிட்டு தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் மக்கள் விழிப்புணர் மையம் சார்பில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், திமுக நகர செயலாளர் முத்துராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு தரங்கம்பாடி டென்னிஸ் கோட்டை கடற்கரை பகுதிகளில் 2022 பனை விதைகள் நடும் திட்டத்தினை, நட்டு தொடங்கி வைத்து பேசினார். 

 

இதில் மக்கள் விழிப்புணர்வு மைய மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் பாண்டியன், மாவட்ட செயலாளர் லெனின் கிறிஸ்டோபர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், பேரூர் திமுக அவைத் தலைவர் கந்தசாமி,

 

 

துணைச் செயலாளர் மதியழகன், மாவட்ட திமுக பிரதிநிதி சடகோபன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி தூய்மை பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )