BREAKING NEWS

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது, 460 கிலோ குட்கா, சொகுசு கார், ஆட்டோ பறிமுதல் – எஸ்பி அதிரடி நடவடிக்கை.

திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

ஆய்வாளர் பாலாண்டி ,சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் வாழைக்காய் பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கை நடைபெற்றதால் வீட்டை சோதனை செய்ததில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இஸ்மாயில்(32), தெளபிக் ராஜா(28) ஆகிய இரண்டு பேரை கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 460 கிலோ குட்கா, சொகுசு கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்கிறார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )