திண்டுக்கல் மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி.

தமிழக அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் உள்ள மந்தை குளத்தை ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூர்வாரி குளத்தை சுற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை அமைக்கும் பணியை துவக்கி வைத்து பொதுமக்கள் மத்தியில் வேடசந்தூர்சட்டமன்ற உறுப்பினர் எஸ் காந்திராஜன் அவர்கள் நமது கழக ஆட்சியின் ஓராண்டு சாதனையை எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் பேரூர் கழக செயலாளர் கணேசன் மற்றும் வடமதுரை பேரூராட்சி மன்ற தலைவர் நிருபாராணிகணேசன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
