BREAKING NEWS

திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடந்தது.!

திமுக நல்லூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் நடந்தது.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள லெமன் ஹோட்டலில் திமுக கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். 

 

இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரை. கருப்புசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் மாரிமுத்தாள் குணா, அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பால். கருப்பையா, மாவட்ட கவுன்சிலர் நகர், சி.சக்தி விநாயகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்க. நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர். 

 

 

 

15வது கழகத் தேர்தலில் திமுக தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும்,

 

மாநில இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியின்றி தேர்வான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்,

 

 போட்டியின்றி ஏக மனதாக மீண்டும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் அவர்களுக்கும்,

 

மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாவாடை கோவிந்தசாமி அவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து, கூட்டத்தை துவங்கினர். 

 

 

கூட்டத்தில் எதிர்வரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை அவரவர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினர் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,

 

 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டி அமைத்து செயல்படுவது குறித்தும்,

 

கழகத்துக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இளைஞர்களை அணிதிரட்டுவது, கட்சியினை பலப்படுத்துவது மற்றும்,..

 

கட்சியினர் கழக வளர்ச்சிக்கு பாடுபடுவது போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. 

 

 

நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் சேப்பாக்கம் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை,சேகர், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணாங்கட்டி, ஞானவேல், செந்தில்குமார், நாராயணசாமி,

 

இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நல்லூர் தனசேகரன், நகர் பாபு, வேப்பூர் தளபதி குணா, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் சேப்பாக்கம் செந்தில்குமார், ஒன்றிய மாணவரணி ராஜவேல், மாரிமுத்து,

 

கிளைக் கழக நிர்வாகிகள் மோகன்ராஜ், எல் ஐ சி ஜெயபால் , ரஜினி, இலங்கியனூர் ராஜா, நகர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர், கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )