BREAKING NEWS

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!

வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களை சந்தித்தார் .அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் வீதி வீதியாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு திறந்த ஜீப்பில் நின்றபடி அவர் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் நகர செயலாளர் சாரதிகுமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் திமுகவைச் சேர்ந்த வேலூர் வள்ளலார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS