BREAKING NEWS

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கும்பகோணத்தில் பேட்டி.

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கும்பகோணத்தில் பேட்டி.

தமிழகத்தில் பாஜக தேடப்படும் குற்றவாளிகளாக வளர்ந்து உள்ளனர்,
சனாதன தர்மத்தை பற்றி எதுவும் தெரியாமல் அரைவேக்காடு தனமாக அண்ணாமலை பேசி வருகிறார் என
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கும்பகோணத்தில் பேட்டி.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வருகை தந்தார் இந்த நிலையில் கும்பகோணத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்ததா என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில்
பாஜக தேடப்படும் குற்றவாளிகளாக வளர்ந்து உள்ளனர் சனாதன தர்மத்தை பற்றி எதுவும் தெரியாமல் அரைவேக்காடு தனமாக அண்ணாமலை
பேசி வருகிறார்.

தமிழகத்தில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் பிடிக்க வேண்டும் என்பது அண்ணாமலை ஆசையாக இருக்கலாம்,
ஆனால் தமிழகத்தில் இந்த வாய்ப்பு சாத்தியப்படுமா என்பதை பார்க்க வேண்டும்.

வருகின்ற
ஜனாதிபதி தேர்தலில்
17 கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது வருகின்ற 2024 நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான ஒத்திகை.தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனாதிபதி தேர்வுக்கு
ஒத்த கருத்து ஏற்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என கருதுகிறேன். கல்வியை
ஒன்றிய பட்டியல். மாநில பட்டியல். ஒத்திசை பட்டியல். என மூன்று உள்ளது எனவே கல்வி. கலாச்சாரம், மாநிலத்திற்கு மாநிலம் மாறும் என்பதால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில நிர்வாகி ஒரத்தநாடு செல்வம் மாவட்ட தலைவர் நிம்மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )