BREAKING NEWS

திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

 

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண் துறையின், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் வரவேற்றார்.

 

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

 

 

வேளாண் வல்லுநர்கள், மூத்த விவசாயிகள் பலர் கருத்தரங்கில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம், பாரம்பரிய நெல் ரகங்கள், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், பஞ்ச கவ்யம், பூச்சு விரட்டி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவாகப் பேசினர். முன்னதாக கண்காட்சி அரங்கை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.

 

இதில் பாரம்பரியல் நெல் ரகங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மரபு சார்ந்த முறையில் சாகுபடி செய்யப்பட்ட காய், கனி வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், செம்பை ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )