திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 4- கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து பூர்ணாகதி, மகா தீபாரதனை நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
மேலும் திருக்களாச்சேரி சீதலாதேவி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்களாச்சேரி சீதலாதேவி மாரியம்மன் வணங்கி வழிபட்டனர்.
மேலும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் திருக்களாச்சேரி ஜமாத்தார்கள் சார்பில் கும்பாபிஷேக வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டு இருந்தது.