திருச்சியில் அதிவேக காற்றால் மரம் சாய்ந்து இருசக்கர வாகனம் நசுங்கியது மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு.

திருச்சி அடுத்துள்ள சோம்பேரசம் பேட்டை சாலையில் உள்ள சுமார் 50, 60 வருடம் பழமை வாய்ந்த மரம் பலத்த காற்று காரணமாக ஒடிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது சக்கர வாகனங்கள் நசுங்கியது.
மேலும் பேருந்து போக்குவரத்து நிறைந்த மக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் மின் கம்பம் காற்றின் வேகத்தால் எதிர்ப்பாரவிதமாக திடீரென சாய்ந்ததால் பரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மின்வாரியத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் திருச்சி கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தார்.
தொடர்ந்து மின்கம்பங்கள் சீர்படுத்தும் பணிகளையும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் வீடுகளுக்கு செல்லும் கேபிள் நெட்வொர்க் ஒயர்கள் அருந்து விழுந்ததை தொடர்ந்து கேபிள் நெட்வொர்க் நிறுவனத்தார் சம்பவ இடத்திற்கு சென்று கேபிள் நெட்வொர்க் கேபிள்களை சீர்படுத்தி வருகின்றனர். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர்செய்து பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.