BREAKING NEWS

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3 ஆகிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீதி சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

 

ஆகவே நாளை (17.122022) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது. எனவே திருச்சி மாநகராட்சி மண்டலம் 1-ல் அமைந்துள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளான மேலூர், தேவி ஸ்கூல், பாலாஜி அவென்யூ, பெரியார் நகர், திருவானைக்கோவில், அம்மா மண்டபம், ஏ.ஐ.பி.இ.ஏ நகர், தேவதானம்.

 

மண்டலம் 2-ல் அமைந்துள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளான விறகு பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி பழையது, சுந்தரராஜநகர் புதியது, சுந்தரராஜபுரம் பழையது, காஜாமலை புதியது.

 

மண்டலம் 3 -ல் அமைந்துள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளான அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்ப நகர் புதியது, மலையப்பன் நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, மகாலட்சுமி நகர், முன்னாள் ராணுவ காலனி பழையது,

 

முன்னாள் ராணுவ காலனி புதியது, மேல கல்கண்டார் கோட்டை செக்சன் ஆபீஸ், மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி, மேல கல்கண்டார் கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வர்யா நகர்,

 

மண்டலம் 4-ல் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிகளான ஜே.கே.நகர், செம்பட்டு, காமராஜ் நகர், எல்.ஐ.சி புதியது, எல்.ஐ.சி சுப்பிரமணிய நகர், தென்றல் நகர் புதியது, தென்றல் நகர் பழையது, இபி காலனி, வி.என் நகர் புதியது, வி.என் நகர் பழையது, கேகே நகர், சுப்பிரமணிய நகர் புதியது,

 

சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர் , அம்மன் நகர் கவி பாரதி நகர், எடைமலைப்பட்டி புதூர் புதியது , காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, ரங்கா நகர்.

 

மண்டலம் 5-ல் அமைந்துள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகளான மங்கலம் நகர், சிவா நகர், உறையூர் புதியது, உறையூர் பழையது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய தொட்டிகளுக்கு 17.12.2002 அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது.

 

மறுநாள் 18.12.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )