திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி,
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது.
தொடக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 10 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வந்தவர்களை மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் வரவேற்று,
இயக்க செயல் பாடுகளைப் பற்றியும், தொடக்கவுரை ஆற்றினார். கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. பெரம்பலூர் மாவட்டத்தில் புகை வண்டி நிலையம் அமைக்க வேண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகளை மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு காரைக்கால், கும்பகோணம், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வரையும்,
காரைக்கால், கும்பகோணம், திருவையாறு, அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர், சேலம் வரை ரயில் விட வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்திகிறது.
2. பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும், ஏற்படுத்தும் வரை விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொற்கிறது.
3. தமிழகத்தின் உள்ள ஆறு, ஏரி, குளங்களை மாசு இல்லாத நீர் நிலைகளை உருவாக்கி, தூர் வாரி இயற்கை வளங்களை பாதுகாக்க மாநில அரசை மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
4. புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவத்தை கண்டிக்கிறது. இது போன்ற நிகழ்வு வேறு எங்கும் நடைபெறாமல் இருக்க வலியுறுத்துகிறது.
பெரம்பலூர் மாவட்டம் சிவக்குமார், வெங்கடாசலம் ,ர மேஷ், வைரமணி, கரூர் மாவட்டம் சுகுமார், முத்து, தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமி, வன்னியராஜா, தஞ்சை மாவட்டம் முருகானந்தம், ஜோசப் அமல்ராஜ்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆனந்தராஜ், கணேசன், செல்வகுமார் , மதுரை மாவட்டம் சேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்ந்தார்கள் .
முடிவில் மக்கள் சக்தி இயக்கம் மாநில துணை செயலாளர் ஆர்.இளங்கோ நன்றி கூறினார்.