BREAKING NEWS

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

 

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

 

 

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் 30 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் ஏ.ஆர்.கே குடியிருப்பில் 20லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். 

 

 

நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கே.எஸ்.எம் கருணாநிதி, திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் சத்யா கோவிந்தராஜ், கூத்தைபார் பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )