BREAKING NEWS

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 12வது பேரவை கூட்டம் திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசு கௌரவத் தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.

 

தலைவர் துரைசாமி, பொதுச் செயலாளர் ரகுராமன், பொருளாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி என உருவாக்கிட வேண்டும்.

 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் துரிதப்படுத்த வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share this…

CATEGORIES
TAGS