திருநெல்வேலியில் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லை டவுண் தனியார் மருத்துவமனையில் நெல்லை மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
மகளிரணி தலைவர் திருமதி S.சித்ராசேகர் அவர்கள், துணைத்தலைவர் திருமதி சங்கரம்மாள் அவர்கள், திருமதி லதா அவர்கள், திருமதி புனிதா அவர்கள், துணைச்செயலாளர் திருமதி மீனாட்சி சுந்தரி அவர்கள், செயற்க்குழு உறுப்பினர் திருமதி சித்ராதேவி அவர்கள், திருமதி ஜோதிமீனாட்சி அவர்கள், திருமதி சுப்புலட்சுமி அவர்கள், திருமதி வனிதா அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகளிர் அணி பொறுப்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கைகான படிவத்தை மகளிர் அணி தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். உறுப்பினர்களை அமைப்பில் சேர்ப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. பெண்களின் சுய தொழில் முன்னேற்றத்திற்காக தொழில் தொடங்குவது பற்றி அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் நமது அமைப்பின்
கூட்டம் நடைபெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் அணி பொறுப்பாளர்களும் அமைப்பிலுள்ள அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.