திருநெல்வேலி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வு இன்று விக்கிரமசிங்கபுரம் பொதிகை வாசகர் வட்டத்தின் சார்பில் வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் மைதீன் பிச்சை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நூலகர் குமார் வரவேற்றார். மாணவ மாணவிகளுக்கு சுற்றுபுறச்சூழல் தின கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல் ராஜன் ஈஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலையரசு சுப்பிரமணியன் மற்றும் நூலகர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கற்ப அவிழ்தம் பருவ இதழ் மற்றும் மூலிகை செடிகள் அன்பளிப்பாக வழங்கி உலக தமிழ் ஆராய்ச்சி மருத்துவ கழகத்தின் தலைவர் மற்றும் கற்ப அவிழ்தம் ஆசிரியர் மைக்கேல் ஜெயராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நூலக வாசகர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் கைலாசம் நன்றி கூறினார். திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர்.