திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்அம்பை பகுதியில் பூட்டிய வீட்டில் திருடிய ஆசாமி கைது.

அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரது வீட்டில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புசுமார் 55 சவரன் நகைகள்திருட்டு போனது,மேலும் சின்ன சங்கரன் கோவில் ரோடு சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த ரூபினா பர்வீன் என்பவர் வீட்டில் 8 சவரன் நகைகள்திருட்டு போனது.
இது குறித்து உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில்அம்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழிகாட்டுதலின் படியும் உதவி சூப்பரன்ட் பல்வீர் சிங் முன்னிலையில்.
அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைத்து அம்பை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளையும்,பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் இந்த திருட்டு வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் போஸ்ட்முகிலன் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த அய்யாபழம் என்பது மகன் சுடலை பழம் (44)என தெரிய வந்தது.
நேற்று காலை அம்பை ரயில் நிலையம் அருகில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து 131 சவரன் தங்க நகைகள் மற்றும் 536 கிராம் வெள்ளி நகைகள் ரொக்கம் ரூபாய் 50 ஆயிரம்ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சுடலை பழம் மீதுநெல்லை மாவட்டத்தில் 17 திருட்டு வழக்குகளும்,
கோவில்பட்டியில் 4 திருட்டு வழக்குகள் உள்பட தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.