திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் ஆதி திராவிடர் ஆணையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக கொடுத்த மனுவின்மீது விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜரானார்.
ஆனால் ஆணையம் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக அபராதம் விதித்தும், கைது செய்து 28.12.2022 – ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விதித்த உத்தரவிற்கு தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
CATEGORIES திருநெல்வேலி