திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திருப்பத்தூர் மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு.
13-11-2022 அன்று இரவு 9.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திருப்பத்தூர் தலைமை பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மருந்துகள் மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் அன்போடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும்.
உரிய தரமான சிகிச்சை அளிக்க அறிவுரைகளை வழங்கினார். வழங்கிய அறிவுரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தினார்.
CATEGORIES திருப்பத்தூர்