திருப்புவனத்தில் அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டினார்.

செய்தியாளர் வி ராஜா
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் முன்னால் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதனன்ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்களும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளும், ஒன்றிய குழு தலைவர் அவர்களும், ஒன்றிய குழு துணை தலைவர் அவர்களும், நகரக் கழகச் செயலாளரும், ஒன்றிய கழகச் செயலாளர்களும், ஒன்றிய கவுன்சிலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், துறை சார்ந்த அதிகாரிகளும், கழக முன்னோடிகளும் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS அமைச்சர் திரு கே.ஆர்.பெரியகருப்பன்அரசியல்சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்புவனம்