திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து உடுமலை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி..
இரத்தின லிங்கேஸ்வரர்க்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்டது கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரத்தின லிங்கேஸ்வரரை வழிபட்டனர்இதே போல் உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலும். மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வண்ண கோலம் இட்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் நகரப் பகுதியில் உள்ள வீடுகளிலும் வீட்டின் மாடிகளில் தீபங்களை ஏற்றி தீபவழிபாடு செய்தனர். திரும்பிய திசை எல்லாம் தீப ஓளியுடன் காணப்பட்டது.