திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடம் களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதில் 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 15. துறைகள் கால்நடை உடற்கூறியல். உடற்செயலியல். கால்நடை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மருத்துவ பண்ணை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் தங்கும் விடுதி, உணவகம், ஆகிய வசதிகள் மற்றும் கால்நடைகள். கோழிவளர்ப்பு தொழில் நூட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES திருப்பூர்
TAGS தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதமிழ்நாடு கால்நடை துறைதமிழ்நாடு கால்நடை புதிய கட்டிடம் மருத்துவதலைப்பு செய்திகள்திருப்பூர் மாவட்டம்பால்வளம். மற்றும் மீன்வளத்துறைமு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறப்பு