திருவள்ளூர் அருகே ரூ,13,லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ,13,லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உளுந்தை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுத்தமான குடிநீர் இல்லாமல் நீண்ட காலமாக அவதிபட்டு வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்க கிராமத்தில் உள்ள இரண்டு வீதிகளில் ரூ.6,லட்சத்து 75 ஆயிரம் என ரூ.13,லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார்.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கிராமமக்கள் பயன்பாட்டிற்காக ஊராட்சி ஒன்றிய ஆணையர் அ.சந்தானம் மற்றும் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.
இதனால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் சுத்தமான குடிநீர் அருந்த வேண்டும் என தனது சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.