திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
அருணகிரிநாதரால், “திருப்புகழ்”, “கந்தர் அனுபூதி”, “கந்தர் அலங்காரம்” உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட “திருவிசைப்பா”, திருப்பல்லாண்டு ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்து இயற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது.
பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோயில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு தல சிறப்புகளை உடைய இக்கோயிலில்ப மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தை மாத கிருத்திகை சோமாவாரத்தில் (திங்கட்கிழமை) தினத்தில் தை மாத கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மா இலை பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் பூரனாகஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலய வெளி மற்றும் உட்புர பிரகாரத்தினை வலம் வந்து அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மற்றும்..
பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.
கோயில் அறங்காவலர் ஜெயராமன் செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.