BREAKING NEWS

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கலை மற்றும் கல்வித் திருவிழா போட்டிகள் நடந்தது “மாநில அளவில் வெற்றி பெறு பவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு”

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  கலை மற்றும் கல்வித் திருவிழா போட்டிகள் நடந்தது  “மாநில அளவில் வெற்றி பெறு பவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு”

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் கல்வி திருவிழா போட்டிகள் ஒன்றிய அளவில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

 

இது பற்றிய விவரம் வருமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலை மற்றும் கல்வி திருவிழா அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் தோறும் கவின்கலை, நுண்கலை, மற்றும் இசை (வாய்ப்பாடு), கருவி இசை, நடனம், நாடகம், மொழிதிறன் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது.

 

 

இதில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதனை அடுத்து இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள அரசு நடுநிலைபள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த ஆறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

 

அது முதலில் பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்டபகுதியில் உள்ள 19 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை மேல்நிலை பள்ளிகள் என 12 பள்ளிகள் உட்பட மொத்தம் 31 பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகள் சுமார் ஆயிரம் பேர் ஒன்றிய அளவில் காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியானது திருவெறும்பூர் வட்டார வளமைய முதன்மை அலுவலர் ரெஜி பெஞ்சமின் வட்டார வளமைய அலுவலர் ஷெகேரா பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 

 

இதனை காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் நடந்த விழாவினை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலர் தாஜுதீன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள்மாநில அளவிலும் மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

இந்த நிலையில் ஒன்றிய அளவில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளை வட்டார வளமையம் சார்பில் வழங்கப்பட்டது, இந்த நிலையில் பள்ளியில் போட்டியில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவர்களை வரவேற்று போட்டி நடத்துவதற்கு வரவேற்பு குழு, பதிவு குழு, உணவு குழு, விளம்பர குழு, ஊடக குழு, சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு, குழு மாணவர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டு குழு, நிதி குழு என எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )