BREAKING NEWS

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.

திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்
505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ஸ்டாலின் மீது மக்கள் பெரும் கோவத்தில் உள்ளனர்.

 

 

திராவிட மாடல் இல்லை ; திருட்டு மாடல். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வரலாம். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டி அகற்றிவிட்டு , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை அமர வைப்பார்கள் என்று பேசினார்.

 

 

நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நல்லுசாமி ,விவசாய பிரிவு துணைத் தலைவர் சுப்பைய்யன், முன்னாள் எம்எல்ஏ., பாலன், சின்னசாமி, தலைமையிட பேச்சாளர் பாலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 

CATEGORIES
TAGS