தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் இளஞ்செழியன். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை சென்று கொண்டிருந்தார்.
தஞ்சை மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதியுள்ளார். இதில் இளஞ்செழியன் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 அடி பள்ளத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தஞ்சை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்