தூத்துக்குடியில் இருந்து பூண்டி சென்ற சுற்றுலா பயணிகள் ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலி – 2 பேர் சடலமாக மீட்பு : 4 பேரை தேடும் பணி தீவிரம்.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் கொண்ட பக்தர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குளித்து கொண்டிருந்த ஆறு பேரை அடித்து சென்றது.
உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது மீட்புபணியில் ஈடுபட்டனர். ஆற்றில், அடித்து செல்லப்பட்ட ஆறு பேரில் இரண்டு பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன நான்கு பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆற்றில் அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
CATEGORIES தஞ்சாவூர்