BREAKING NEWS

தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.

தூத்துக்குடியில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் போலீசார் விசாரணை.

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய பேச்சுக்கு; நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா நேற்று தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆவேசமாக பேசினார்.

 

பாஜக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், சட்ட மன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பின்னர், 1,000 ஏழை எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்கு தையல் மிஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.

 

 

 

பின்னர், சசிகலா புஷ்பா பேசுகையில், 1 அரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை ஆகவே, அவரை புகழ்கிறோம். முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பி வழக்குக்கு நிற்கவில்லை. குற்றவாளிகளை கொண்டு போய் நின்று தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்கு பழக்கம் இல்லை.

 

24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச தகுதி இல்லை. மரியாதையாக பேச சொல்லி கொடுத்த பண்பு பாஜக, ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை.

 

 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அண்ணாமலைக்கு ஆங்காங்கே மக்கள் கூட்டம் நிற்கிறது. சனாதனம் பற்றி பேசுவோம் அது எங்கள் கொள்கை. தேர்தல் வாக்குறுதியான மக்களுக்கு 1,000 ரூபாய் கல்வி கடன் ரத்து போன்றவை ஏமாற்றம் என கூறிய அவர், அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார் அதற்கு பதிலடி அளித்த அவர் பேசுகையில், நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது நாக்கு இருக்காது என சாடினார்.

 

பின்னர், நிங்கள் செய்யும் ஊழலை பற்றி சொல்லுவோம், சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து சமூகத்தை பேணவில்லை.. நாகரிக அரசியல் செய்ய வேண்டும். தெற்கத்தி பெண்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். தூத்துக்குடி யில் மாற்றம் வர போகிறது.

 

 

கீதாஜீவன் அமைச்சராக இருக்கும் போது இங்கு திமுக தோற்க போகிறது. பிஜேபி வெற்றி பெற போகிறது என நேற்று அவர் பேசிய நிலையில் இன்று அவரது வீடு மற்றும் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது.

 

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் சிப்காட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ஈச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா இன்று நாகர்கோவில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருப்பதை தொடர்ந்து பாஜகவினர் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS