தூத்துக்குடியில் திமுக முன்னால் மாவட்ட செயலாளர் நினைவு தினம் அமைச்சர், மேயர், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் நெல்லை ஒருங்கிணைந்த திமுகவில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 8ம் ஆண்டு நினைவு தினம் மே 26ல் (26:05:2025) இன்று அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாராக பணியாற்றியவரும் முத்தமிழறிஞர் கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டவரும் நம்பிக்கைக்குரிய ஒருவருமாக திகழ்ந்தவர். 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர்.
ஒரு முறை தூத்துக்குடி நகர மன்ற தலைவராகவும், இரண்டு முறை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து தூத்துக்குடி நகருக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கடல் சாரா பயிற்சி பள்ளி, அரசு மருத்துவக் கல்லுரி, 3வது பைப் லைன் திட்டம், பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு, புதிய பேருந்து நிலையம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் உள்ள மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், அண்ணாச்சி என்.பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், எம்.சி. சண்முகையா மற்றும் ராஜாபெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அருகிலுள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் அன்னதானம் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
அஞ்சலி நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்ன பாண்டியன், ராதாகிருஷ்ணன், பீக்கிலி பட்டி முருகேசன், செல்வராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி மதியழகன், மாவட்ட மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப அணி அபிராமிநாதன், இலக்கிய அணி சரத் பாலா, வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், சி.எஸ்.ராஜா, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், ஆதிதிராவிடர் நல அணி தலைவர் சி.பெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் அருன் சுந்தர், ஐ.ரவி, தொழிலாளர் நல அணி முருக இசக்கி, சுற்றுச்சூழல் அணி சாரதி, வழக்கறிஞர் அணி ரூபஸ், மகளிரணி ஜெயக்கனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி, அஸ்வின் , வைதேகி, தொண்டரணி ராமர், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பிக்கப் தனபால், மகேஸ்வரன் சிங், பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மற்றும் காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் முரளிதரன், மதிமுக நிர்வாகிகள் திமுக வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் என்.பெரியசாமி குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.