BREAKING NEWS

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு.

 

10 திருநங்கைகள் சேர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் கொள்ளையடித்ததால் வழக்கு பதிவு.

 

 மத்திய பாகம் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.

 

 

 தூத்துக்குடியில் அண்மை காலமாக திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது ஏற்கனவே தூத்துக்குடியில் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் வாலிபர் ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து அவரது மொபைல் போனை கைப்பற்றி சரமாரியாக தாக்குகின்ற வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

 

 தூத்துக்குடியில் அண்மைக்காலமாக பேருந்து நிலையம், மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், முன்பாக நின்று கொண்டு வணிக நிறுவனங்களை விட்டு வெளியே வரும் பொது மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் செயல் அதிகரித்து வருகிறது.

 

 இது குறித்து காவல்துறையிடம் யாரும் புகார் அளிக்காததால் இவர்களை காவல் துறையினர் ஒன்று செய்ய முடியாமல் இருந்தது.

 

இந்த நிலையில் இன்று வாலிபர் ஒருவரை வழிமறித்து பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து தாக்குவதும் அவரிடம் இருந்து மொபைல் போனை பிடுங்குவதுமான CC TV காட்சி வைரலாகி வந்த நிலையில் வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர் இந்த செய்தி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

 

 மேலும் இந்த திருநங்கைகள் துறைமுக நகரமான தூத்துக்குடி புறவழிச் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரி ஓட்டுனர்களை குறி வைத்து அவர்களிடம் இருந்து பணம் பறிப்பது, திருமண வீடுகளுக்கு சென்று மணமேடையில் மணமக்களை மறைத்து நின்று கொண்டு ஆயிரம் ரெண்டாயிரம் என திருமண வீட்டாரிடம் இருந்து பணம் பிடுங்குவதும் அதிகரித்து வருகிறது.

 

 இதனையும் காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

மூன்றாம் பாலினத்தவராக அனைவராலும் மதிக்கப்படக்கூடிய அனைவராலும் இரக்கத்தோடு பார்க்கக் கூடிய நபராக இருக்க கூடிய திருநங்கைகள் தற்போது ரவுடிகளாக மாறி வழிப்பறியில் ஈடுபடுவதும் பணம் தர மறுப்பவர்களை சரமாரியாக தாக்குவதும் வலுக்கட்டாயமாக பணத்தை பிடுங்குவதுமாக மாறி இருப்பது வேதனைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

 

 

 திருநங்கைகள் மீது எல்லோருக்கும் ஒரு தனி கரிசனை இருந்து வந்த நிலையில் தற்போது முகம் சுளிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது.

 

 இந்த நிலை மாற வேண்டுமானால் திருநங்கைகள் தங்களது மனநிலையை மாற்றி உழைத்து சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் மட்டுமே சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு நல்ல மரியாதை கிடைக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )